காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி காங்கயம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களை காங்கயம் வேர்கள் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் வெள்ளிக்கிழமை வழங்கினர்.
  காங்கயம் அரசு மருத்துவமனையில் 36 சிகிச்சைப் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.  இங்கு வரும் நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையாக இருந்து வந்தது. இதனால் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் முழுமையாக பரிசோதனை செய்ய இயலாத காரணத்தால், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவந்தனர்.
  இந்நிலையில்,  காங்கயம் வேர்கள் அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து காங்கயம் அரசு மருத்துவமனைக்கு மருத்து உபகரணங்களை வெள்ளிக்கிழமை வழங்கினர்.  காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,  காங்கயம் அரசு மருத்துவ அலுவலர் பூங்கொடி தலைமை வகித்தார். வேர்கள் அமைப்பின் பொறுப்பாளர் சதீஷ் வரவேற்றார். லட்சுமி விலாஸ் வங்கியின் முன்னாள் மேலாளர் மருதமுத்து, வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கரகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாக்பூர் நிராமய அறக்கட்டளை நிர்வாகி ராம்கோபால்ரத்னம் சிறப்புரையாற்றினர்.
  இதில், வேர்கள் அமைப்பு மற்றும் தன்னார்வலர்களின் சார்பில், இசிஜி கருவி,  சிடிவி இயந்திரம்,  மல்டி பாரோ மீட்டர்,  பிங்கர் பல்ஸ் ஆக்ஸோமீட்டர்,  ஆட்டோகிளேவ்,  தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம் என ரூ. 3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கயம் வேர்கள் அமைப்பினர் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com