மதுக்கடைகளுக்கு 15-இல்   விடுமுறை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  மதுக் கடைகளுக்கு திங்கள்கிழமை  (ஜனவரி 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு  மதுக் கடைகளுக்கு திங்கள்கிழமை  (ஜனவரி 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 15-ஆம் தேதி(திங்கள்கிழமை)  திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக் கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுக் கூடங்களில் மது விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
அன்றைய தினம் மேற்கூறப்பட்ட கடைகள் மூடப்பட்டு,  மதுபான விற்பனை நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.  உத்தரவை மீறி செயல்படுவோர் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com