வெள்ளக்கோவிலில் அதிமுக- தினகரன் அணியினரின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலில், முத்தூர் - அய்யனூர் சாலையிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த இக்கூட்டத்துக்கு, கட்சியின் திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான உடுமலை சி.சண்முகவேலு தலைமை வகித்தார்.
மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் கே.எஸ்.சண்முகராஜ், கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் எம்.வி.சண்முகராஜ், நகரச் செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய அம்மா பேரவைச் செயலாளர் எஸ்.கோவிந்தராஜ் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.