உடுமலைப்பேட்டை ஹாக்கி சங்க மகாசபைக் கூட்டம் யுகேபிஎம்.மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தலைவர் சி.நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் எம்.மோகன்குமார் வரவேற்றார். இதில் இந்த ஆண்டில் உடுமலைப்பேட்டை ஹாக்கி அசோசியேஷன் சார்பில் மாநில அளவிலான போட்டிகளை நடத்துவது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி மட்டை, பந்துகள் வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டன.
மேலும் திருப்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள உடுமலைப்பேட்டை ஹாக்கி அசோசியேஷன் என்ற பெயரை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. துணைச் செயலாளர் செந்தில் குமாரவேல் நன்றி கூறினார்.