காங்கயம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஜனவரி 20) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை
கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் கோட்டச் செயற்பொறியாளர் என்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர்.