ஹஜ் யாத்திரை மானியம் ரத்து: திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து திருப்பூரில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், குமரன் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகரத் தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டத் தலைவர் தென்னரசு முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,  இஸ்லாமிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஹஜ் யாத்திரைக்கான மானியத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இது இஸ்லாமிய மக்களின் நலனுக்கு எதிரானதாகும். எனவே, மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 
இதில், கட்சி நிர்வாகிகள், சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளானோர்  கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com