திருப்பூர்
வெள்ளக்கோவிலில் விவசாயிகள் பயிற்சி முகாம்
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மண்டல வேளாண்மை உதவி இயக்குநர் ஜாகிர் நவாஸ் தலைமை வகித்தார். அறுவடைக்குப் பின் ஏற்படும் நஷ்டம், மதிப்புக் கூட்டுப் பொருள்கள் உற்பத்தி, விளை பொருள்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல், உழவன் செயலியின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் விற்பனைக் கூடத்தின் செயல்பாடுகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வேளாண் துறை அலுவலர்கள், விற்பனைக் குழு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.