அவிநாசியில் பொது மைதானம் அமைக்க கோரிக்கை

அவிநாசியில் அரசியல் கட்சிகள், இலக்கிய அமைப்புகள் பொது நிகழ்வு நடத்த நகராட்சி சார்பில் நிரந்தர பொது மைதானம் அமைத்துத் தரவேண்டும்

அவிநாசியில் அரசியல் கட்சிகள், இலக்கிய அமைப்புகள் பொது நிகழ்வு நடத்த நகராட்சி சார்பில் நிரந்தர பொது மைதானம் அமைத்துத் தரவேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் அவிநாசி கிளை மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு,  பொறுப்பாளர் ச.மு.ரமேஷ்குமார் தலைமை வகித்தார்.  மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஈஸ்வரன், சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் வே.தினகரன் வரவேற்றார்.
இதில்,  அவிநாசி பொது நிகழ்வு நடத்துவதற்கு  நகராட்சி நிர்வாகம் பொது மைதானம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com