உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.
இதனால் விவசாயிகளும், பொது மக்களுக்கும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில், உடுமலை, மடத்துக்குளம் வட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் உடுமலை நகரின் தாழ்வான பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றது. அதைத் தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறைந்து நகரில் குளிர்காற்று வீசியதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். உடுமலை நகரைப் போலவே பல்வேறு கிராமங்களிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.