திருப்பூர்
வெள்ளக்கோவிலில் சாரல் மழை
வெள்ளக்கோவில் சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.
வெள்ளக்கோவில் சுற்று வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை சாரல் மழை பெய்தது.
கடந்த சில வாரங்களாக வெயில் குறைவாக இருந்தாலும், பகல் நேரத்தில் அதிக உஷ்ணம் நிலவியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் காற்று வீசத் தொடங்கியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மதியம் ஒரு மணிக்குத் தொடங்கிய சாரல் மழை ஆங்காங்கே விட்டுவிட்டுப் பெய்தது. பலத்த மழை பெய்தால் மட்டுமே குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என
கூறப்படுகிறது.