தாராபுரம் அருகே ஆட்டோ மோதியதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம், ராஜீவ் நகரை சேர்ந்தவர் துரைசாமி (30). விவசாயி. விவசாய இடுபொருள்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் தாராபுரம் வந்துள்ளார். பின்னர் அவர் கோவிந்தாபுரத்துக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது பொள்ளாச்சி சாலையில் எதிரே வந்த ஆட்டோ துரைசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த துரைசாமி தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.