பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவர் குப்புராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கனகராஜ், பொருளாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் தீர்ப்பாயக் காலங்களுக்குப் படி வழங்க வேண்டும்.
இயற்கை இடர்பாடு காலப் பணிக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்
வலியுறுத்தப்பட்டன.