டெங்கு விழிப்புணர்வு முகாம்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே வே.முத்தம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே வே.முத்தம்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 பள்ளித் தலைமை ஆசிரியர் கோ.திருமுகம் தலைமை வகித்து முகாமை தொடக்கி வைத்தார். இதில் வே.முத்தம்பட்டி வனப் பகுதியில் பாறைகளுக்கிடையே தேங்கி நிற்கும் நீரை மாணவர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை குறித்து எடுத்துரைத்தனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பி.சரவணன், உதவி திட்ட அலுவலர் எஸ்.தயாநிதி உள்ள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 பாலக்கோட்டில்...
 ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் அ.லட்சுமணன் தலைமை வகித்தார். பேரணியை பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எம்.ஜீவா கிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பாலக்கோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இப்பேரணியில், காய்ச்சலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com