தருமபுரி மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில், அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர்.
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், அண்மையில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மேல்மூத்தோர் பிரிவு கால்பந்துப் போட்டிகளில், அதியமான் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றிபெற்றனர். மேலும், சேலம் கோட்ட அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். அதேபோல, சரக அளவிலான 400 மீ. தடை தாண்டும் போட்டி, உயரம் தாண்டு போட்டியில் இப்பள்ளி மாணவர் பிரவின்குமார் முதலிடம் பெற்றார். 200 மீ. ஓட்டப் போட்டியில் இப்பள்ளி மாணவர் மணி முதலிடம் பெற்றார். 400 மீ., 800 மீ. ஓட்டம், போல்வாட் ஆகிய மூன்று போட்டிகளிலும் மாணவர் ரமேஷ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இம்மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஜி.துரை, உடற்கல்வி ஆசிரியர் பி.மணி ஆகியோரையும் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியர் சி.முனுசாமி, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் ரவி, பொருளர் சங்கர், துணைத் தலைவர் ஆண்டியப்பன், உதவி தலைமை ஆசிரியர் தேவராஜ் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.