அரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை ஒன்றிய பொதுச் செயலர் பொன். நாவளவன் தொடக்கி வைத்தார். அரூர் திரு.வி.க. நகர், பாட்சா பேட்டை, 4 வழிச் சாலை, கச்சேரிமேடு, வர்ணதீர்த்தம் உள்ளிட்ட பகுதியில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் உறுப்பினர்களாக இணைந்தனர்.
இதில், ஒன்றியத் தலைவர் கே.நந்தகுமார், ஒன்றிய துணைத் தலைவர் காவி. பவுன்ராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.