காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு விரைந்து வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
தருமபுரியில் புதன்கிழமை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் கோட்டாட்சியர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ. சின்னசாமி, தருமபுரி வருவாய்க் கோட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து சேதப்படுத்து வருகின்றன.
இவ்வாறு, சேதமைடந்த விளைநிலங்களுக்கு விரைந்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளை தூர்வார வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்திப் பேசினார்.
கூட்டத்தில், வேளாண், தோட்டக்கலைத் துறை, வனத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.