அரூரை அருகே பெண்களை கேலி, கிண்டல் செய்து விளம்பர பேனர் வைத்ததாக 9 பேரை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்தனர்.
அரூர் வட்டம், கீரைப்பட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு, இளைஞர்கள் சிலர் திருவிழா வரவேற்பு பேனர் வைத்துள்ளனர். அதில், பெண்களை கேலி,
கிண்டல் செய்யும் வகையில் விளம்பர பேனரில் வாசகம் எழுதப்பட்டிருந்ததாம். இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கீரைப்பட்டியைச் சேர்ந்த பீமன் மகன்கள்
அறிவழகன் (22), தினேஷ் (20), சர்தார் மகன்கள் சையத் ஆசிக்சையத் (19), இஸ்மாயில் (21), பாஷா மகன் பரூக் (10), சேகர் மகன் ரஞ்சித் (19), புகழேந்தி மகன் பிரதீப் (20), சீனிவாசன் மகன் ஜெய் (18), குமார் மகன் பவித்ரன் (20) ஆகியோரை போலீஸôர் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய மணி (எ) பல்சர் மணி, சென்னப்பன் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடி வருகின்றனர்.