ரயில் பாதையில் இரும்புக் கம்பிகள்: போலீஸார் விசாரணை

ரயில் பாதையில் இரும்புக் கம்பிகள் கிடந்த விவகாரம் தொடர்பாக, ரயில்வே போலீஸார் மற்றும் தருமபுரி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் பாதையில் இரும்புக் கம்பிகள் கிடந்த விவகாரம் தொடர்பாக, ரயில்வே போலீஸார் மற்றும் தருமபுரி நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், யஸ்வந்தபூரிலிருந்து கொச்சிவேலிக்கு கடந்த ஜூன் 19- ஆம் தேதி இரவு வாராந்திர ரயில் புறப்பட்டு வந்துள்ளது. இந்த ரயில் அன்றைய தினம் நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் தருமபுரி அருகேயுள்ள கடகத்தூர் ரயில்பாதையில் வந்துக் கொண்டிருந்தபோது, தீடிரென ரயில் சக்கரத்தில் சப்தம் வந்துள்ளது.
இதையடுத்து, ரயிலை நிறுத்தி அதன் ஓட்டுநர் கீழே இறங்கி சோதனை செய்தார். அப்போது, ரயில் பாதையில் இருந்த இரும்புக் கம்பிகள், சக்கரத்தில் சிக்கி சேதமடைந்தது தெரிய வந்தது. இருப்பினும், அசம்பாதிவம் ஏதும் நிகழவில்லை. இதையடுத்து, தருமபுரி ரயில் நிலையத்தில் அதிகாரியிடம் ஓட்டுநர் தகவல் அளித்துள்ளார். இதையடுத்து, ரயில் அங்கிருந்து புறப்பட்டு கொச்சிவேலி நோக்கிச் சென்றது.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ரயில்வே போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர், நகர போலீஸாருக்கு விசாரணை நடத்திட உத்தரவிட்டார். அதன் பேரில், போலீஸார் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com