பெண் பலாத்காரம்: இளைஞர் கைது

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே பெண் பலாத்கார வழக்கில் இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே பெண் பலாத்கார வழக்கில் இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
 மாரண்டஹள்ளி அருகே வட்டுகானம்பட்டியைச் சேர்ந்த 37 வயது பெண், அமானி மல்லாபுரம் கூட்டுச் சாலையில் இருந்து தனது கிராமத்துக்கு கடந்த 18-ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
 அப்போது, அமானி மல்லாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி (20) என்பவர், அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்த புகாரின் பேரில், மாரண்டஹள்ளி காவல் நிலைய ஆய்வாளர் கண்ணையன் வழக்குப் பதிவு செய்து, பெண்ணை பலாத்காரம் செய்த பெரியசாமியை கைது செய்து, ராசிபுரம் கிளைச் சிறையில் அடைத்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com