தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை எடுத்துரைத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.