அரூரை அடுத்த கொளகம்பட்டியில் இளைஞர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
அரூர் ஒன்றியம், வாழைத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஜெய்சங்கர் (35). இவர், கடந்த 20-ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.
இந்த நிலையில், திங்கள்கிழமை கொளகம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் ஜெய்சங்கர் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவரது தாய் சின்னத்தங்கம் (60) அளித்த புகாரின் பேரில் அரூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.