நகர காவல் நிலையத்தில் கொசு ஒழிப்புப் பணி ஆய்வு

தருமபுரி நகர காவல் நிலையத்தில், கொசு ஒழிப்புப் பணியினை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தருமபுரி நகர காவல் நிலையத்தில், கொசு ஒழிப்புப் பணியினை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நகர காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை மற்றும் குற்றப் பிரிவு போலீஸார் அறை ஆகிய இடங்களிலும், அதே போல, பல்வேறு குற்ற வழக்குகளில் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்திலும் சுகாதாரமாக உள்ளதா எனவும், கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆட்சியர் பார்வையிட்டார்.
அதையடுத்து, காவல் அலுவலகம் மற்றும் தருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் கொசு மருந்து தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com