விடுதலைப் போராட்டத் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 134-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி பாப்பாரப்பட்டியிலுள்ள அவரது மணிமண்டபத்தில் மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் உள்ளிட்டோர் புதன்கிழமை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து அருகேயுள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சிவாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில், வருவாய்க் கோட்டாட்சியர் ராமமூர்த்தி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மு. பாரதிதாசன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் டி.ஆர். அன்பழகன், வட்டாட்சியர் சேதுலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.