அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பு

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன .

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன .
சென்னை பாவேந்தன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகைகள் வழங்கப்படுகின்றன.
2016-17-ஆம் கல்வியாண்டில் சிறப்பிடம் பெற்ற பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் எஸ்.பிரவீண், எஸ்.ஜெய்சங்கர், ஜி.சந்தோஷ், கே.வீரமணி, ஆர்.சூர்யா, கே.சிவா ஆகியோருக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரையிலும் ஊக்கத் தொகைகள் பாவேந்தன் நினைவு அறக்கட்டளையின் செயலர் மணிமேகலை புஷ்பராஜ் வழங்கினார்.
இதில், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கம் தமிழ், பள்ளி தலைமை ஆசிரியர் அ.நடராசன், உடல்கல்வி இயக்குநர் ஓ.நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com