"நீட்' தேர்வுக்கு ஆதரவாக பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

தருமபுரியில் பா.ஜ.க. சார்பில் "நீட்' தேர்வுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரியில் பா.ஜ.க. சார்பில் "நீட்' தேர்வுக்கு ஆதரவாக வெள்ளிக்கிழமை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஆர்.ஏ.வரதராஜன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் கோட்டீஸ்வரன், கே.பிரபாகரன், வழக்குரைஞர் பிரிவு தேசியச் செயலர் குமரகுரு உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், "நீட்' தேர்வு தொடர வேண்டும் என வலியுறுத்தியும், திமுக தலைமையிலான கட்சிகள் பொய்ப் பிரசாரம் நடத்துவதாக கூறியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட பொதுச் செயலர் எஸ்.ஆர்.அழகு, கே.எம்.ஆறுமுகம், பொருளர் ஆர்.கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com