பாப்பாரப்பட்டியில் ரத்த தான முகாம்

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தே.பேரின்பன் நினைவு தினத்தையொட்டி, பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தே.பேரின்பன் நினைவு தினத்தையொட்டி, பாப்பாரப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
அச் சங்கத்தின் பகுதிச் செயலர் சிலம்பரசன் தலைமை வகித்தார். தேவ.பேரின்பனின் உருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பபினர் இரா.வேட்ராயன், சங்க மாவட்டச் செயலர் இரா.எழிலரசு, விவசாயிகள் சங்கச் செயலர் ஆர்.சின்னசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலர் ஆர்.விஸ்வநாதன் மற்றும் மறைந்த பேரின்பனின் குடும்பத்தினர் முகாமில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com