பிப்.15-இல் பேரவை  உறுதிமொழிக்குழு தருமபுரி வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினர் வருகிற பிப்.15-ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தர உள்ளனர். 

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினர் வருகிற பிப்.15-ஆம் தேதி தருமபுரிக்கு வருகை தர உள்ளனர். 
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினர் பிப்.15-இல் தருமபுரி மாவட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்கின்றனர். உறுதிமொழிக் குழுத் தலைவர் சி.ராஜா மற்றும் உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,  சி.வி.எம்.பி.எழிலரசன், சு.குணசேகரன், துரை சந்திரசேகரன், ப.சிவகுமார் (எ) தாயகம் கவி, பெ.பெரியபுள்ளான் (எ) செல்வம்,  முனைவர் க.பொன்முடி,  த.மனோதங்கராஜ், நா.மனோரஞ்சிதம், சட்டபேரவைச் செயலர் க.பூபதி, இணைச் செயலர் பா.சுப்பிரமணியம் மற்றும் சார்புச் செயலர் த.சுஜாதா தேவி, பேரவைச் செயலக அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர்.
இக்குழுவினர், தருமபுரி மாவட்டத்தில், நடைபெற்று வரும் பணிகள், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com