அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு

மொரப்பூர் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் வியாழக்கிழமை இரவு உடைந்தன.

மொரப்பூர் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் வியாழக்கிழமை இரவு உடைந்தன.
தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அரசுப் பேருந்துகளை ஓட்டும் பணியில் தாற்காலிக ஓட்டுநர்கள் ஈடுபட்டனர். 
இந்த நிலையில், தருமபுரி-அரூர் சாலையில் கெரகோடஹள்ளி மற்றும் ஒடசல்பட்டி ஆகிய இடங்களில் அந்த வழியாக வந்த 2 அரசுப் பேருந்துகளின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கியதில் பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தாற்காலிக ஓட்டுநர்கள் அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com