மொரப்பூர் அருகே மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில், 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் வியாழக்கிழமை இரவு உடைந்தன.
தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, அரசுப் பேருந்துகளை ஓட்டும் பணியில் தாற்காலிக ஓட்டுநர்கள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தருமபுரி-அரூர் சாலையில் கெரகோடஹள்ளி மற்றும் ஒடசல்பட்டி ஆகிய இடங்களில் அந்த வழியாக வந்த 2 அரசுப் பேருந்துகளின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கியதில் பேருந்துகளின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்தன. இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தாற்காலிக ஓட்டுநர்கள் அளித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.