மதுக்கடைகள் மூடல் அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜன. 15, 26 மற்றும் 31 ஆகிய மூன்று நாள்களும் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜன. 15, 26 மற்றும் 31 ஆகிய மூன்று நாள்களும் மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: வரும் ஜன. 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினம், ஜன. 26-ஆம் தேதி குடியரசு தினம், ஜன. 31-ஆம் தேதி வள்ளலார் நினைவு நாள் என இந்த மூன்று நாள்களும் தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தகங்கள் மற்றும் மதுபானம் விற்க உரிமம் பெற்ற தனியார் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.  இந்த உத்தரவை மீறி யாரேனும் திறந்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்
படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com