தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச விளையாட்டு உபகரணங்களைப்

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச விளையாட்டு உபகரணங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார். 
2017-18ஆம் ஆண்டில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் இவற்றைப் பெறுவதற்கு, தங்களது முழுமையான விவரங்களுடன் உரிய சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com