தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வென்ற தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இலவச விளையாட்டு உபகரணங்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்புவிடுத்துள்ளார்.
2017-18ஆம் ஆண்டில் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும், மூன்றாமிடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வழங்கப்படும் இவற்றைப் பெறுவதற்கு, தங்களது முழுமையான விவரங்களுடன் உரிய சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலருக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.