அரசு வாரியத் தேர்வில், தருமபுரி மருதம் நெல்லி பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறப்பிடம் வகித்தனர்.
தருமபுரியில் கடந்த ஏப்ரல் மாதம் டிப்ளமோ தேர்வு முடிவுகள் தொழில் நுட்ப இயக்கத்தால் வெளியிடப்பட்டது. இத் தேர்வில், தருமபுரி மாவட்டம், மருதம் நெல்லி பல்தொழில்நுட்பக் கல்லூரி மாணவ, மாணவிகள் மாநிலத்தில் இரண்டாமிடமும், மாவட்டத்தில் முதலிடமும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். இக் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் துறை மாணவி குங்குமப்ரியா 700 -க்கு 699 மதிப்பெணகளும், சங்கீதா 700-க்கு 694 மதிப்பெண்களும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மாணவர் தமிழரசன் 700-க்கு 690 மதிப்பெண்களும், முதலாம் ஆண்டு மாணவர் தியாகராஜன் 800-க்கு 783 மதிப்பெண்களும் பெற்று, மாநில மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பிடம் வகித்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி தாளாளர் கோவிந்த் பாராட்டினார் .