அரூரில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூர் நகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவுக்கு நகரச் செயலர் முல்லை செழியன் தலைமை வகித்தார். விழாவில் திமுக மாவட்டச் செயலரும், எம்எல்ஏ-வுமான தடங்கம் பெ.சுப்பிரமணி பங்கேற்று, அரூர் ஆர்.சி. பள்ளி, வர்ணதீர்த்தம், அம்பேத்கர் நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்க்கு நோட்டுகள், எழுதுப் பொருள்கள், இனிப்புகளை வழங்கினர்.
இதில் ஒன்றியச் செயலர் தேசிங்குராஜன், முன்னாள் எம்எல்ஏ வேடம்மாள், நிர்வாகிகள் சென்னகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், முகமது அலி, சிட்டிபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.