தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் திங்கள்கிழமைகளில் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அறிவித்துள்ளார்.
இதன்படி வரும் மார்ச் 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்த மருத்துவ முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத் திறனாளிகள் தங்களின் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவுள்ள 4 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்றுப் பயன்பெறலாம்.