மார்ச் 21இல் மக்கள் தொடர்பு முகாம்கள்

தருமபுரி மாவட்டம் வள்ளிமதுரை மற்றும் மாரியம்பட்டி கிராமங்களில் வரும் மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

தருமபுரி மாவட்டம் வள்ளிமதுரை மற்றும் மாரியம்பட்டி கிராமங்களில் வரும் மார்ச் 21ஆம் தேதி காலை 10 மணிக்கு மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.
அரூர் வட்டம் வள்ளிமதுரையில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி தலைமை வகிக்கிறார். நல்லம்பள்ளி வட்டம் மாரியம்பட்டியில் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமிற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அ. சங்கர் தலைமை வகிக்கிறார்.
இவ்விரு முகாம்களிலும் அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்கவுள்ளதால், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com