கோடை மழையின் இரண்டாம் நாளாக தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் மற்றும் மாரண்டஅள்ளி பகுதிகளில் மட்டும் சனிக்கிழமை இரவு மழை பெய்தது. இதில், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான பதிவில் ஒகேனக்கல்லில் 16.40 மிமீ அளவு மழையும், மாரண்டஅள்ளியில் 20 மிமீ மழையும் பதிவாகின. தருமபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய இடங்களில் மழையில்லை. ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மாவட்டத்தின் எந்தப் பகுதியிலும் மழைப் பொழிவு இல்லை.