தருமபுரி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியில் பள்ளி பரிமாற்றத் திட்ட ஆய்வு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியை வி. வெண்ணிலா தலைமை வகித்தார். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட அலுவலர் சீனிவாசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசுமதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன துணை முதல்வர் அசோகன், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சகாயமேரி ஆகியோர் பேசினர். விழாவில், சின்னப் பள்ளத்தூர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பழனி மற்றும் அந்தப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்று பள்ளி பரிமாற்றத் திட்ட செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். இதைத் தொடர்ந்து, வினாடி-வினா, அறிவியல் விடுகதைகள், சைகை மூலம் பழமொழி கூறுதல் உள்ளிட்டப் போட்டிகள் மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்டன. இதில், சிறப்பிடம் வகித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் வி. செளந்திரபாண்டியன் நன்றி
கூறினார்.