தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலுள்ள தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் ரயில்வே தேர்வு வாரியத்தின் உதவியாளர், ரயில் ஓட்டுநர் உள்ளிட்ட தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் மார்ச் 28ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர் பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.