வானொலி நிலைய கோபுரத்தில் ஏறி வாழ்வுரிமைக் கட்சியினர் போராட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் அக் கட்சியினர் சனிக்கிழமை அகில இந்திய வானொலி அலுவலக வளாகத்தில் நுழைந்து அங்குள்ள கோபுரத்தில் ஏறி

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தருமபுரியில் அக் கட்சியினர் சனிக்கிழமை அகில இந்திய வானொலி அலுவலக வளாகத்தில் நுழைந்து அங்குள்ள கோபுரத்தில் ஏறி போராட்டத்தில்ஈடுபட்டனர்.
தருமபுரி அதியமான்கோட்டையிலுள்ள வானொலி நிலையம் முன் அக் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் தவமணி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் வானொலி நிலையத்துக்குள் புகுந்து அங்குள்ள கோபுரத்தில் ஏறத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து, காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதியமான்கோட்டை காவல் நிலையப் போலீஸார் விரைந்து வந்து, கோபுரத்தில் ஏறியவர்களை இறங்க அறிவுறுத்தினர். சிறிது நேரத்தில் கோபுரத்தில் இருந்து இறங்கியவர்கள் உள்பட 40 பேரை போலீஸார் கைது செய்து, அழைத்துச் சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com