ஜோதிநகர் அரசு பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் கு.ஆனந்தி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் மு.லட்சுமி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் பள்ளியின் தற்போதைய வளர்ச்சிப் பணிகள்,மாணவர் முன்னேற்றம், கல்வித் தர வளர்ச்சி குறித்து பேசினார்.
புதிய பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவரைத் தேர்வு செய்வது, அனைத்து கிராமங்களிலும் உள்ள பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க முழு முயற்சி மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது. உதவி ஆசிரியர் வே.வஜ்ஜிரவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com