நாமக்கல் மக்களவை தொகுதி உறுப்பினர் பி.ஆர். சுந்தரம், தொகுதி தலைமை அலுவலகத்தை நாமக்கல்லில் தொடங்கினார். மக்களை எளிதில் அணுக இந்த அலுவலகத்தைத் திறந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாமக்கல்-திருச்சி சாலையில் "அம்மா' உணவகம் எதிரில் இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற அலுவலக திறப்பு விழாவில் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் பேசியது:
நாமக்கல், சேந்தமங்கலம், பரமத்திவேலூர் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களை எளிதில் சந்திக்க இந்த அலுவலகம் உதவும். பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை இந்த அலுவலகத்தில் அளிக்கலாம். இதற்காக உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோரிக்கை மனுக்களை நேரில் அளிக்க இயலாதவர்கள் ஹண்ஹக்ம்ந்ல்ழ்ள்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீர்ம் என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9013869378 என்ற கட்செவி அஞ்சல் எண் மூலமாகவும் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்கலாம்.
கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும். இப்போது ராசிபுரத்தில் இயங்கிவரும் அலுவலகம் தொடர்ந்து செயல்படும். கோழிப் பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க, பண்ணையாளர்களுக்கு உதவ தயாராக இருக்கிறேன் என்றார்.
விழாவுக்கு நாமக்கல் நகர்மன்ற முன்னாள் தலைவர் ரா.கரிகாலன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ரா.சாந்தி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலர் கே.பி.எஸ். சுரேஷ்குமார், கொல்லிமலை ஒன்றியச் செயலர் பி.சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.