சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம்

சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் குறைதீர் கூட்டம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களிடமிருந்து ஏற்கெனவே பெறப்பட்ட 14 கோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்களிடமிருந்து 28 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை உரிய அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பி.நல்லப்பன் மறைவுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செ.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் உள்பட அரசுத் துறை அலுவலர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவரது வாரிசுதாரர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com