மின்சாரம் பாய்ந்து பெண் தொழிலாளி பலி

மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது தெரியாமல் மின் கம்பத்தை தொட்ட பெண் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

மின் கம்பி அறுந்து விழுந்து கிடந்தது தெரியாமல் மின் கம்பத்தை தொட்ட பெண் மின்சாரம் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
 நாமக்கல் ராமாபுரம்புதூர் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் வரதன். இவரது மனைவி சங்கராயி (65). நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள கடைகளை பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்து வந்தார்.
 வெள்ளிக்கிழமை காலை ஹோட்டல் ஒன்றில் சுத்தம் செய்த போது, கடை வாசலில் இருந்த இரும்புக் கம்பத்தை தொட்டார். அப்போது திடீரென அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்பகுதி மக்கள் நாமக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 சாலையோரத்தில் மின் கம்பி அறுந்து கிடந்ததால், அதன் மூலம் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியானது தெரியவந்தது. அதன் பின் மின்வாரிய ஊழியர்கள் அறுந்து போன கம்பியை அப்புறப்படுத்தி மின் கசிவை சீரமைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com