தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பட்டு மையம், நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்பு சார்பில் தொழில் தொடங்குவதற்கான இலவச ஆலோசனை முகாம் நாமக்கல்லில் வரும் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்ட சிறு, குறு தொழில் கூட்டமைப்புத் தலைவர் என்.இளங்கோ வெளியிட்ட அறிக்கை: நாமக்கல்-திருச்செங்கோடு சாலை கோஸ்டல் ரெசிடென்சி ஹோட்டலில் நீங்களும் தொழில் தொடங்கலாம் என்ற தலைப்பில் தொழில் தொடங்குவதற்கான இலவச ஆலோசனை முகாம் வரும் 22 ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில், கிராமப்புற மக்கள், படித்த இளைஞர்கள், சுய உதவிக் குழுக்கள், தொழில் தொடங்க தேவையான தொழில் நுட்பம், நவீன லாபகரமான தொழில் வாய்ப்புகள், நவீன விவசாயம், காளான் வளர்ப்பு, வங்கிக் கடன், சந்தை வாய்ப்புகள், அரசு மானியங்கள் குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் இலவசமாக விளக்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ப விருப்பமுள்ளவர்கள் 8825812528 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு பெயரினை குறுஞ்செய்தி அனுப்பி பதிவு செய்துகொள்ளலாம்.