சாய் தபோவனத்தில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா: நாளை நடைபெறுகிறது

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள சாய் தபோவனத்தில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
 கீரம்பூர் அருகே சாய் தபோவனம் உள்ளது. இத் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அதிகாலை 4.15 மணிக்கு ஆரத்தியும், 5 மணிக்கு சிறப்பு ஹோமமும், 6 மணிக்கு சாய் தபோவன ஆலய கோபுர கலச அபிஷேகமும், மங்கள ஸ்நானமும் நடைபெறுகிறது. 7 மணிக்கு சர்வசித்தி தனஹர்சன சாங்கல்பமும், 8.30 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது. மதியம் 12 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு ஆரத்தியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com