அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி மாவட்டச் செயலர் சரவணன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கோபிநாத் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் அரப்புளி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், ராமர் கோயிலை கட்ட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் என நிர்வாகிகள் முழக்கம் எழுப்பினர். இதில், மாவட்டத் தலைவர் சரவணன், பொருளாளர் பாலு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.