ஆதிதமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராசிபுரம் அருகே குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அண்மையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி,

ராசிபுரம் அருகே குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அண்மையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரி, ஆதி தமிழர் கட்சியினர் ராசிபுரம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் சட்ட மசோதாவாக கொண்டு வரவேண்டும். குச்சிக்காடு லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் குற்றவாளிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும் முன் பணம் என்ற பெயரில் கூடுதல் வட்டி வசூலிக்கும் கந்துவட்டி முறையை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆதிதமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பிரேம்குமார் பொதுச் செயலாளர் சுப.இளங்கோவன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com