பசுமை மாரத்தான்: 2500 பேர் பங்கேற்பு

திருச்செங்கோடு நம் பசுமை அமைப்பின் சார்பில் பசுமை மராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நம் பசுமை அமைப்பின் சார்பில் பசுமை மராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. 7 வயது முதல் 10 வயதுள்பட்டோர் ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 13 வயது வரையுள்ளோர் ஒரு பிரிவாகவும், சிறுவர்-சிறுமியர் ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. மகாதேவ வித்யாலயம் பள்ளியிலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டி, அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரையில் 3 கிலோ மீட்டர் தொலைவு நடைபெற்றது. இதில், பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், சிறுவர்கள் பங்கேற்றனர். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழும், பதக்கமும் வழங்கப்பட்டன.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com