பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில், சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.900 பறிமுதல் செய்தனர்.
பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் அங்கு சென்ற போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்ட மாணிக்கந்தத்தைச் சேர்ந்த பொன்னுசாமி (38), நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (39), ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த அழகேசன் (47), அதே பகுதியைச் சேர்ந்த அருண் (33), தங்கராஜ் (30), வேலூர் பகுதியைச் சேர்ந்த செல்லதுரை (40) உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.900 பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.