ஜூன் 21-இல் யோகா தின கொண்டாட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு யோகா பயிற்சி நடைபெறுகிறது.

சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகளில் ஜூன் 21-ஆம் தேதி சிறப்பு யோகா பயிற்சி நடைபெறுகிறது.
 ஆண்டுதோறும் ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், நாமக்கல் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில் சர்வதேச யோகா தினம் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது.
 காலை 7 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மு. ஆசியா மரியம் தலைமை வகிக்கிறார். காவல் கண்காணிப்பாளர் அருளரசு, முதன்மைக் கல்வி அலுவலர் உஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாமக்கல் மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் சாந்தி, வெங்கடாசலம், ராமு, செல்வகுமார், மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்கும் யோகா பயிற்சியும் நடைபெறுகிறது. நாமக்கல் கோட்டை அறிவுத் திருக்கோயிலில் நடைபெறும் விழாவுக்கு நாமக்கல் கம்பன் கழகத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகிக்கிறார். நிர்வாகிகள் துரைசாமி, பார்த்திபன், மாணிக்கவாசகம், பாப்பு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளிலும் யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com