ஊதிய உயர்வு வழங்கக் கோரி வேலைநிறுத்தம்

ஊதிய உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட வார்பிங், சைசிங் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து, நாமக்கல் மாவட்ட வார்பிங், சைசிங் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
 தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்கப்படாதது சம்பந்தமாக பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் தீர்வு காணப்படவில்லை. எனவே, இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் வார்பிங், சைசிங் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெகதீசன், செயலர் செல்வராஜ், தொழிலாளர் சங்கத் தலைவர் ராமலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மணிவேல் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் உடன்பாடு எட்டப்படாததால் திங்கள்கிழமை முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com